Song lyrics

Poovizhi Vaasalil Lyrics

பூவிழி வாசலில் யாரடி பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1977
Singers
K. J. Yesudas, S. Janaki
Lyricist
Pulamaipithan
Poovizhi Vaasalil

Lyrics

Poovizhi Vaasalil Lyrics

பூவிழி வாசலில் யாரடி வந்தது 
கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று 
அழைக்குது எனையே

பூவிழி வாசலில் யாரடி வந்தது 
கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று 
அழைக்குது எனையே

அரும்பான காதல் பூவானது
அனுபவ சுகங்களை தேடுது
நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
நெருங்கவும் மயங்கவும் ஓடுது
மோகம் வரும் ஒரு வேளையில்
நாணம் வரும் மறு வேளையில்
இரண்டும் போராடுது
துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை

பூவிழி வாசலில் யாரடி வந்தது 
கிளியே கிளியே ( ஆஹா )
இளம் கிளியே கிளியே ( ஆஹா )
அங்கு வரவா தனியே ( ஆஹா )
மெல்ல தொடவா கனியே ( ஆஹா )
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று 
அழைக்குது எனையே ( ஆஹாஹா )

இள மாலைத் தென்றல் தாலாட்டுது
இளமையின் கனவுகள் ஆடுது
மலை வாழை கால்கள் தள்ளாடுது
மரகத இலை திரை போடுது
கார் மேகமோ குழலானது
ஊர்கோலமாய் அது போகுது
நாளை கல்யாணமோ ஓ...
எனக்கும் உனக்கும் பொருத்தம் தானே

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
இளம் கிளியே கிளியே இங்கு வரலாம் தனியே
மெல்லத் தொடலாம் எனையே
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று 
அழைத்தது உனையே

கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ

கலை இது அறிமுகம் வேண்டுமோ

அசைந்தாடும் ஊஞ்சல் நாமாகவோ

நவரச நினைவுகள் தோன்றுமோ

பூமேனியோ மலர் மாளிகை

பொன் மாலையில் ஒரு நாழிகை

நாளும் நானாடவோ

அணைக்கும்

துடிக்கும்

சிலிர்க்கும் மேனி

பூவிழி வாசலில் யாரடி வந்தது 
கிளியே கிளியே ( ஆஹா )
இளம் கிளியே கிளியே ( ஆஹா )
இங்கு வரலாம் தனியே ( ஆஹா )
மெல்லத் தொடலாம் எனையே ( ஆஹா )
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று 
அழைத்தது உனையே ( ஆஹா )
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people