Lyrics
Thaye Unnai Lyrics
தாயே உன்னை இத்தனை காலம் எப்படி பிரிந்து வாழ்ந்தேனோ
கால் பட்ட இடமெல்லாம் கருவறை போல தாங்கிக்கொண்டது நீதானோ
நீரும் நிழலும் உணவும் தந்து உயிரை காத்தாய் நீ
வேண்டாம் என்று என்னை நீயும் தள்ள மாட்டாய் நீ
மரம் செடி போல் மனிதனையும் வளர்த்து காத்தவள் நீதானே
ஐவகை நிலங்களை அங்கங்கள் ஆக்கி அழுக்களை கூட சுமக்கின்றாய்
கோல வடிவில் சுமைதாங்கியாகி ஒய்வே இன்றி சுற்றுகிறாய்
உன்னை விட்டால் வாழ்வெது
உன்னை போலே உறவேது
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இருந்தாலும் இறந்தாலும்
நிலையான சொந்தம் நீதானே
உன்னை இனியும் பிரியேனே
உன்னை இனியும் பிரியேனே
கால் பட்ட இடமெல்லாம் கருவறை போல தாங்கிக்கொண்டது நீதானோ
நீரும் நிழலும் உணவும் தந்து உயிரை காத்தாய் நீ
வேண்டாம் என்று என்னை நீயும் தள்ள மாட்டாய் நீ
மரம் செடி போல் மனிதனையும் வளர்த்து காத்தவள் நீதானே
ஐவகை நிலங்களை அங்கங்கள் ஆக்கி அழுக்களை கூட சுமக்கின்றாய்
கோல வடிவில் சுமைதாங்கியாகி ஒய்வே இன்றி சுற்றுகிறாய்
உன்னை விட்டால் வாழ்வெது
உன்னை போலே உறவேது
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இருந்தாலும் இறந்தாலும்
நிலையான சொந்தம் நீதானே
உன்னை இனியும் பிரியேனே
உன்னை இனியும் பிரியேனே
People
Related People
2 people