Song lyrics

Edhai Ninaithom Lyrics

எதை நினைத்தோம் பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
G. V. Prakash Kumar
Year
2015
Singers
G. V. Prakash Kumar
Edhai Ninaithom

Lyrics

Edhai Ninaithom Lyrics

எதை நினைத்தோம் அதை அடைந்தோம்
அடைந்த பின்னே உண்மை நாம் உணர்ந்தோம்

எதை நினைத்தோம் அதை அடைந்தோம்
அடைந்த பின்னே உண்மை நாம் உணர்ந்தோம்

ஆசைக்குத் தான் அளவுகள் இல்லையே
அதைத் தொடர்ந்தால் வாழ்க்கை தொல்லையே

ஆசையைத் தான் வென்றவன் இல்லையே
அதை இன்று தான் உணர்ந்ததென் பிள்ளையே

புதுப் புது ஏக்கம் அளித்திடும்
தினம் தினம் தூக்கம் கெடுத்திடும்

மனதினை திறந்து வைக்கையில்
இருப்பதை நெஞ்சம் ரசித்திடும்

எதை நினைத்தோம் அதை அடைந்தோம்
அடைந்த பின்னே உண்மை நாம் உணர்ந்தோம்

ஆசையில் ஏறி மேகத்தில் போனோம்
குயில் முட்டை மேலே காக்கைகள் ஆனோம்

புல் நுனி மீதே தூங்கிடும் பனியை ரசித்தால்
மின்னலின் ஒளியின் மீது கொண்ட

மயக்கம் விலகிடுமே
கிடைத்ததை எண்ணி

வாழ்ந்திடும் வாழ்வை ரசித்தால்
ஜன்னலின் கதவைத் தீண்டி
புதிய வெளிச்சம் வீசிடுமே

எதை நினைத்தோம் அதை அடைந்தோம்
அடைந்த பின்னே உண்மை நாம் உணர்ந்தோம்

ஆசைக்குத் தான் அளவுகள் இல்லையே
அதைத் தொடர்ந்தால் வாழ்க்கை தொல்லையே

ஆசைக்குத் தான் அளவுகள் இல்லையே
அதைத் தொடர்ந்தால் வாழ்க்கை தொல்லையே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

1 people