Song lyrics

Singara Punnagai Lyrics

சிங்காரப் புன்னகை பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Viswanathan Ramamoorthy
Year
1957
Singers
M. S. Rajeswari & R. Balasaraswathi Devi
Lyricist
Kannadasan
Singara Punnagai

Lyrics

Singara Punnagai Lyrics

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
ஓஓஓஓஓஓஓஓஓ

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
எண்ணங்கள் கீதம் பாடுமே ஓஓஓஓஓ
கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
எண்ணங்கள் கீதம் பாடுமே
பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா
பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா
ஓஓஓஓஓஓஓஓஓ

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
ஆஆஆஆஆஆஆ

செல்வமே என் ஜீவனே
செல்வமே என் ஜீவனே
எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
உன் அழகு முகம் கண்டு கொண்டால்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
உன் அழகு முகம் கண்டு கொண்டால்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
செல்வமே எங்கள் ஜீவனே
எங்கள் செல்வமே எங்கள் ஜீவனே

தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
வில்லேந்தும் வீரன் போலவே
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
வில்லேந்தும் வீரன் போலவே
மகனே நீ வந்தாய்
மழலை சொல் தந்தாய்
வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா
மகனே நீ வந்தாய்
மழலை சொல் தந்தாய்
வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா
ஓஓஓஓஓஓஓஓஓஓ

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
ஓஓஓஓஓஓஓஓஓஓ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people