Song lyrics

Kaadhal Maharaani Kavidhai Lyrics

காதல் மகராணி பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Ilaiyaraaja
Year
1987
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyricist
Muthulingham
Kaadhal Maharaani Kavidhai

Lyrics

Kaadhal Maharaani Kavidhai Lyrics

காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்
புது கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தாள்
முத்துப்போல் சிரித்தாள்
மொட்டுப்போல் மலர்ந்தாள்
விழியால் இவள் கணை தொடுத்தாள்
இந்த காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்
புது கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தாள்

பூவை நீ பூ மடல்
பூவுடல் தேன் கடல்
தேன் கடலில் தினமே குளித்தால் மகிழ்வேன்

மான் விழி ஏங்குது
மையலும் ஏறுது
பூங்கொடியை பனிபோல் மெதுவாய் தழுவு

கண்ணே உந்தன் கூந்தல் ஓரம்
கண்கள் மூடி தூங்கும் நேரம்

இன்பம் கோடி ஊஞ்சல் ஆடும்
உள்ளம் போகும் ஊர்வலம்

காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்

ம்..ம்..ம்....ம்ம்..ம்..

பஞ்சணை கூடத்தில்
பால் நிலா காயுதே
நான் என்னையே மறந்தேன் கனவில் மிதந்தேன்

உன் முக தீபத்தில்
ஓவியம் மின்னுதே
உன் அழகால் இரவை பகலாய் அறிந்தேன்

மண்ணில் உள்ள இன்பம் யாவும்
இங்கே இன்று நாமும் காண்போம்

அன்பே அந்த தேவலோக
சொர்க்கம் இங்கே தேடுவோம்

காதல் யுவராஜா கவிதை பூ விரித்தான்
புது கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தான்
முத்துப்போல் எடுத்தான்
தொட்டுத்தான் அணைத்தான்
விழியால் இவன் கணை தொடுத்தான்
இந்த காதல் யுவராஜா கவிதை பூ விரித்தான்

புது கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தாள்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people