Lyrics
Chithada Muthu Kannu Lyrics
சித்தாட முத்துக் கண்ணு
செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு
வித்தாரம் பேசிக்கிட்டாளாம்
அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம் (சித்தாட)
பொன்னழகு கன்னத்துக்கு
பூ மணக்கும் கூந்தலுக்கு
நூறு வகை சீதனங்கள் கொண்டாளே
மாமனுக்கு மயக்கம் என்ன
நா மணக்கும் பாடல் என்ன
உன்னோடு தெம்மாங்கு பாட வந்தேனே
ஆத்தாடி உங்கிட்டே பாடம் கேட்டேனே (சித்தாட)
ஓடுகின்ற தண்ணியிலே
ஆடுகின்ற பொன்மயிலே
ஆடுதடி என் மனசு பந்தாக
ஆடலாம் மனசிருக்கு ஆனாலும் பயமிருக்கு
முன்னாடி என்னடி மோக பம்பரம்
அம்மாடி உன் பார்வை காதல் மந்திரம்..(சித்தாட)
People
Related People
5 people