Song lyrics

Thendral Varum Lyrics

தென்றல் வரும் வழியை பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Ilaiyaraaja
Year
2001
Singers
Bhavatharani, Hariharan
Lyricist
Palani Barathi
Thendral Varum

Lyrics

Thendral Varum Lyrics

தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா
தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா
அள்ளி கொடுத்தேன் மனதை எழுதி வைத்தேன் முதல் கவிதை
கண்ணில் வளர்த்தேன் கனவை கட்டிபிடித்தேன் தலையனையை
குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே நீ

தென்றல் வரும் வழியை ந ந ந ந னா னா
தென்றலுக்கு மலரின் ந ந ந ந னா னா

நீயா அட நானா நெஞ்சை முதல் முதல் இழந்தது யார்
காதல் என்னும் ஆற்றில் இங்கு முதல் முதல் குதித்தது யார்

என்னில் உனை கண்டேன் நமை இரண்டென பிரிப்பது யார்
தேகம் அதில் தீபம் ஒன்று பிரிந்திட இருப்பது யார்

துன்பம் நீ கொடுக்கும் துன்பம் கூட இன்பம்
ஏங்கும் நெஞ்சின் ஏக்கம் என்றும் தொடர வேண்டும்

குண்டு மல்லி கொடியை கொள்ளை அடிக்காதே
வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே

தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா
தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா
அள்ளி கொடுத்தேன் மனதை எழுதி வைத்தேன் முதல் கவிதை
கண்ணில் வளர்த்தேன் கனவை கட்டிபிடித்தேன் தலையனையை
குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே நீ

தென்றல் வரும் வழியை ந ந ந ந னா னா
தென்றலுக்கு மலரின் ந ந ந ந னா னா

காதல் உன் காதல் அது மழையென வருகிறதே
நெஞ்சம் என் நெஞ்சம் அதில் சுடச்சுட நனைகிறதே

நாணம் என் நாணம் ஒரு வானவில் வரைகிறதே
மௌனம் என் மௌனம் ஒரு வார்த்தைக்கு அலைகிறதே

பார்த்தேன் காதல் பயிரின் விதைகள் உந்தன் கண்ணில்
வளர்த்தேன் முத்தம் பூக்கும் செடியை எந்தன் நெஞ்சில்

குண்டு மல்லி கொடியை கொள்ளை அடிக்காதே
வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே

தென்றல் வரும் வழியை ந ந ந ந னா னா
தென்றலுக்கு மலரின் ந ந ந ந னா னா

அள்ளி கொடுத்தேன் மனதை எழுதி வைத்தேன் முதல் கவிதை
கண்ணில் வளர்த்தேன் கனவை கட்டிபிடித்தேன் தலையனையை
குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே நீ

தென்றல் வரும் வழியை ந ந ந ந னா னா
தென்றலுக்கு மலரின் ந ந ந ந னா னா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people