Song lyrics

Thoongatha Vizhigal Lyrics

தூங்காத விழிகள் பாடல் வரிகள்

Last updated Jul 14, 2026

Music
Ilaiyaraaja
Year
1988
Singers
K. J. Yesudas, S. Janaki
Lyricist
Vaali

Lyrics

Thoongatha Vizhigal Lyrics

பெண்:
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

ஆண்:
மாமர இலை மேலே ஆ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
பெண்:
ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
ஆண்:
நாளும் நாளும் ராகம் தாளம்
சேறும் நேரம் தீரும் பாரம்
பெண்:
அ..அஅ..அஅ.. ஆஆ.. ஆஆ..

ஆண்:
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

பெண்:
ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேரும் நிலை என்னவோ
ஆண்:
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கலை அல்லவோ
பெண்:
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மானுடம் உறவாடும் கலை என்னவோ
ஆண்:
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ
பெண்:
மேலும் மேலும் மோகம் கூடும்
ஆண்:
தேகம் யாவும் கீதம் பாடும்
பெண்:
அ..அ..ஆஆ..
ஆண்:
அ..அ..ஆஆ..

பெண்:
தூங்காத விழிகள் ரெண்டு
ஆண்:
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
பெண்:
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆண்:
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது

இருபாலர்:
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people