Lyrics
Kumari Pennai Parthaya Lyrics
குமரிப் பெண்ணை பார்த்தாயா
குறுக்கே வரலாமா வந்தால் தொடலாமா
நெஞ்சமென்ன துள்ளுமோ
நெனச்சு நெனச்சு துடிக்குமோ
கொஞ்சிப் பேச நினைத்தாயா
குறுநகை பூத்தாயா குங்குமம் சிவந்தாயா
இன்னும் நான் ஏங்குவதா
என்ன என்ன மயக்கமோ
நீராடும் வைகையிலே
நீ வந்து நின்ற முதல்
நாள்தோறும் தேடினேன்
ஏன் உன்னை தேடினேன்
காதலைத் தடுப்பதில்லை
கண் வீச்சு தோற்றதில்லை
ஏன் உன்னை நான் பார்த்தேன்
எனக்கும் அதே சூழ்நிலை.....(குமரி)
கடமை வீரனுக்கு
கன்னி மகள் வேண்டுமோ
கற்பனை செய்வதனால்
கட்டிக் கொள்ள தூண்டுமோ
கொடுவாள் ஒரு கையில்
குமரி மறு கையில்
இதுவே வீரனை
எடுத்துக் காட்டும் சாதனை
இதயங் கவர்ந்த சாதனை....(கொஞ்சிப்)
People
Related People
4 people