Song lyrics

Kadavul Thantha Lyrics

கடவுள் தந்த இரு மலர்கள் பாடல் வரிகள்

Last updated Jul 14, 2026

Music
M. S. Viswanathan
Year
1967
Singers
L. R. Eswari, P. Susheela
Lyricist
Vaali
Kadavul Thantha

Lyrics

Kadavul Thantha Lyrics

கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள் 
ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே 

கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள் 
ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே 


காற்றில் உதிர்ந்த வண்ணமலர் கண்ணீர் சிந்தும் சின்ன 
மலர் 
காற்றில் உதிர்ந்த வண்ணமலர் கண்ணீர் சிந்தும் சின்ன 
மலர் 
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா அலைகள் கொண்டு 
போனதம்மா 
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா அலைகள் கொண்டு 
போனதம்மா 
பாவை கூந்தல் சேர்ந்த மலர் பருவம் கண்டு பூத்த 
மலர் 
பாசம் கொண்டு வந்ததம்மா பரிசாய்த் தன்னைத் 
தந்ததம்மா 

கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள் 
ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே 


அலையில் மிதந்த மலர் கண்டு அதன்மேல் கருணை மனம் கொண்டு 
அலையில் மிதந்த மலர் கண்டு அதன்மேல் கருணை மனம் கொண்டு 
தலையில் இறைவன் சூடிக்கொண்டான் தானே அதனை சேர்த்துக்கொண்டான் 
தலையில் இறைவன் சூடிக்கொண்டான் தானே அதனை சேர்த்துக்கொண்டான் 
குழலில் சூடிய ஒரு மலரும் கோயில் சேர்ந்த ஒரு 
மலரும் 
இரண்டும் வாழ்வில் பெருமை பெரும் இதயம் எங்கும் அமைதி பெரும் 

கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள் 
ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people