Lyrics
Andhi Saayum Verlai Lyrics
அந்தி சாயும் வேளை என் அத்தான் வருவார்
அக்கம் பக்கம் பார்த்து என் பக்கம் வருவார்
ஆடு மயிலே என்பார் தமிழ் கவி பாட..மலர்க்
கொடி போல நான் ஆட அவர் பாடுவார் (அந்தி)
மனக் கண்ணிலாடும் மகராசன் தன்னை
மணமாலை சூடும் நாளெந்த நாளோ....
இனிப்பான சேதி தரும் காலந்தன்னை
எதிர்பார்த்து நெஞ்சம் அலைமோதுதே – ஆசை
கண்ணாளன் பண்பாட நான் ஆடுவேன்..(அந்தி)
People
Related People
3 people