Lyrics
Paruvam Ponapaathaiyele Lyrics
பருவம் போன பாதையிலே
என் பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம் கண்ட நாள் முதலாய்
என் உள்ளத்தை ஆட விட்டேன்
காதல் என்றொரு நாடகத்தை
என் கண் வழி மேடையில் நடித்ததில்லை
கற்றுத் தந்தவன் திரு முகத்தை
கன்னியின் நெஞ்சம் மறப்பதில்லை
பருவம் போன பாதையிலே
என் பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம் கண்ட நாள் முதலாய்
என் உள்ளத்தை ஆட விட்டேன்
இதழில் வைத்த ஒரு புன்னகையில்
என் இதயத்தை அளந்து விட்டான்
இரவில் வந்த பல கனவுகளில்
என் இறைவன் வளர்ந்து விட்டான்
எனக்கு எனக்கென்று இருந்த இளமையை
தனக்கென்று கேட்டு விட்டான்
இல்லை இல்லை என்று சொல்ல முடியாமல்
என்னைக் கொடுத்து விட்டேன்
என்னைக் கொடுத்து விட்டேன்
கொடியின் இடையில் ஒரு பாரமில்லை
என் வழியில் நடந்து வந்தேன்
குழந்தை மனதில் ஒரு கலக்கமில்லை
என் காலம் கடந்து வந்தேன்
மாலைப் பொழுதில் இளம் தென்றல்
தொடாத மலராய் நானிருந்தேன்
மன்னன் வந்த அந்த வேளையிலே
அவன் மடியில் ஏன் விழுந்தேன்
மடியில் ஏன் விழுந்தேன்
பருவம் போன பாதையிலே
என் பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம் கண்ட நாள் முதலாய்
என் உள்ளத்தை ஆட விட்டேன்
உள்ளத்தை ஆட விட்டேன்
என் பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம் கண்ட நாள் முதலாய்
என் உள்ளத்தை ஆட விட்டேன்
காதல் என்றொரு நாடகத்தை
என் கண் வழி மேடையில் நடித்ததில்லை
கற்றுத் தந்தவன் திரு முகத்தை
கன்னியின் நெஞ்சம் மறப்பதில்லை
பருவம் போன பாதையிலே
என் பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம் கண்ட நாள் முதலாய்
என் உள்ளத்தை ஆட விட்டேன்
இதழில் வைத்த ஒரு புன்னகையில்
என் இதயத்தை அளந்து விட்டான்
இரவில் வந்த பல கனவுகளில்
என் இறைவன் வளர்ந்து விட்டான்
எனக்கு எனக்கென்று இருந்த இளமையை
தனக்கென்று கேட்டு விட்டான்
இல்லை இல்லை என்று சொல்ல முடியாமல்
என்னைக் கொடுத்து விட்டேன்
என்னைக் கொடுத்து விட்டேன்
கொடியின் இடையில் ஒரு பாரமில்லை
என் வழியில் நடந்து வந்தேன்
குழந்தை மனதில் ஒரு கலக்கமில்லை
என் காலம் கடந்து வந்தேன்
மாலைப் பொழுதில் இளம் தென்றல்
தொடாத மலராய் நானிருந்தேன்
மன்னன் வந்த அந்த வேளையிலே
அவன் மடியில் ஏன் விழுந்தேன்
மடியில் ஏன் விழுந்தேன்
பருவம் போன பாதையிலே
என் பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம் கண்ட நாள் முதலாய்
என் உள்ளத்தை ஆட விட்டேன்
உள்ளத்தை ஆட விட்டேன்
People
Related People
6 people