Song lyrics

Yethedho Karpanai Vandhu Lyrics

ஏதேதோ கற்பனை வந்து பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Chandrabose
Year
1989
Singers
T. L. Maharajan, Lalitha Sagari
Lyricist
Vairamuthu
Yethedho Karpanai Vandhu

Lyrics

Yethedho Karpanai Vandhu Lyrics

ஆண் : ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே
எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே
கண்களிலே கைகளிலே
காதலி தாவணி மோதிய போது

பெண் : ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே
எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே
கண்களிலே கைகளிலே
காதலன் கை விரல் தீண்டியபோது

ஆண் : ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே
பெண் : எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே..

ஆண் : பூவென்பது ஆளானது ஆள் தேடுது ஆத்தாடி
நான் வந்ததும் நாள் வந்தது தேன் சிந்துது அம்மாடி
பெண் : என் கண்களும் என் மேனியும்
நீ பார்த்திடும் கண்ணாடி
ஓராயிரம் பூ மாலைகள் தோள் சேரணும் அம்மாடி;;

ஆண் : அடி காதல் கண்ணம்மா பிடிவாதம் என்னம்மா
அடி காதல் கண்ணம்மா பிடிவாதம் என்னம்மா
பெண் : முதலிரவென்பது முதல் முறை வருவது
அவசரப்படலாமா....

ஆண் : ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே
பெண் : எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே
ஆண் : கண்களிலே கைகளிலே
காதலன் கைவிரல் தீண்டிய போது

ஆண் : ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே
பெண் : எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே...

பெண் : உன் பார்வையில் சூடானவள் ஓராயிரம் சிந்தித்தாள்
காதல் வர மோகம் பெற காமன் கணை சந்தித்தாள்
ஆண் : பூச் சூடவும் தோள் சேரவும் பொன் மாங்கனி சிந்தித்தாள்
மோகம் ஒரு ராகம் தர நாளும் என்னை சந்தித்தாள்

பெண் : தடுமாற கூடாது கரை மீறக் கூடாது
தடுமாற கூடாது கரை மீறக் கூடாது
ஆண் : காவிரி அடியில் ஓடிடும் வேளையில்
கரைகளை கேளாது.....

பெண் : ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே..ம்ம்ம்ம்...
எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே..ம்ம்ம்ம்
கண்களிலே கைகளிலே
காதலன் கை விரல் தீண்டியபோது

ஆண் : ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே..ஆஅஹ்..
எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே..ஹஹாஹ்
கண்களிலே கைகளிலே
காதலி தாவணி மோதிய போது

பெண் : ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே
ஆண் : எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே.....
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people