Song lyrics

Netriyil Pottittu Kangalil Lyrics

நெற்றியில் பொட்டிட்டு கண்களில் மையிட்டு பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
M. S. Viswanathan
Year
1989
Singers
S. P. Balasubramaniam, B. Sasirekha, Sunantha
Lyricist
Pulamaipithan
Netriyil Pottittu Kangalil

Lyrics

Netriyil Pottittu Kangalil Lyrics

பெண் : நெற்றியில் பொட்டிட்டு கண்களில் மையிட்டு
வந்ததே பூஞ்சிட்டு மணப்பெண் நானென்று
நெற்றியில் பொட்டிட்டு கண்களில் மையிட்டு
வந்ததே பூஞ்சிட்டு மணப்பெண் நானென்று

ஆண் : எதுவும் அறியா வயது அடியே பதமாய் பழகு
புருவம் அழகாய் எழுது எனக்கிது ஒரு மகள் ஆஹாஹா
எதுவும் அறியா வயது அடியே பதமாய் பழகு
புருவம் அழகாய் எழுது எனக்கிது ஒரு மகள்

நெற்றியில் பொட்டிட்டு கண்களில் மையிட்டு
வந்ததே பூஞ்சிட்டு மணப்பெண் நானென்று ...

பெண் : பிள்ளை முகம் பாலூறுது
கிள்ளை மொழி தேனூறுது முல்லைப்பூ சிரிக்கும்
முகம் வெட்கத்தால் சிவக்கும்
வஞ்சிக்கொடி வா இப்படி மாப்பிள்ளை கையைப்பிடி
என்னம்மா நடிப்பு நெஞ்சில் இன்பத்தின் துடிப்பு ( 2 )

ஆண் : அப்பாவும் நீயும் பூமாலை சூடும்
கல்யாணம் நான் பார்க்கவில்லை
இப்போது பார்த்தேன் கண்ணீரை வார்த்தேன்
என் நெஞ்சில் ஆனந்த எல்லை ( 2 )

கரமும் கரமும் இணைய நரையும் திரையும் மறைய
நலமும் வளமும் நிறைய நடந்திடும் திருமணம் ஆஹாஹா

ஆண் : சூடாமணி சிந்தாமணி பாலும் பழம் கொண்டாங்கடி
முதல் நாள் இரவு ரெண்டு மனம் போல் உறவு
முந்தானையில் கட்டிக்கணும் எந்நேரமும் ஒட்டிக்கணும்
மகளே சமத்து நான் சொல்லவா உனக்கு

பெண் : கண்ணான கண்ணே கல்யாணப் பெண்ணே
எந்நாளும் மங்காத பொன்னே
நூறாண்டு காலம் நீ காண வேண்டும்
மாறாது செந்தூரக் கோலம்

ஆண் : ஹோ அடடா கவனம் கவனம்
அளவா பெறணும் பெறணும்
அறியாப் பருவம் பருவம்
அனுபவம் புதியது புதியது

இருவரும் : நெற்றியில் பொட்டிட்டு கண்களில் மையிட்டு
வந்ததே பூஞ்சிட்டு மணப்பெண் நானென்று.....
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people