Song lyrics

Naaloru Medai Lyrics

யாருக்கு யார் என்று பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
S. M. Subbhaiya Naïdhu
Year
1965
Singers
T. M. Soundararajan
Lyricist
Vaali
Naaloru Medai

Lyrics

Naaloru Medai Lyrics

யாருக்கு யார் என்று தெரியாதா
இந்த ஊருக்கு உண்மை புரியாதா
திருமண மேடையைத் தேடி வந்தேன்
என் தலைவன் திருவடி நாடி வந்தேன்
திருமண மேடையைத் தேடி வந்தேன்
என் தலைவன் திருவடி நாடி வந்தேன்
இமைகள் மூடிய கண்ணாக
இதயம் தேடிய பெண்ணாக
ஓஹோ ...


இரவாய் பகலாய் நீ இருக்க
இரவாய் பகலாய் நீ இருக்க
உறவாய் உயிராய் நானிருக்கஆஹஹா

யாருக்கு யார் என்று தெரியாதா

ஊரார் வார்த்தையை கேட்காமல்
உற்றார் முகத்தைப் பார்க்காமல்
ம்ஹ¤ம்
ஊரார் வார்த்தையை கேட்காமல்
உற்றார் முகத்தைப் பார்க்காமல்
நேராய் நெஞ்சில் நின்றவரே
நினைவால் என்னை வென்றவரே


யாருக்கு யார் என்று தெரியாதா

பருவம் என்றொரு பொழுது வரும்
பாவை என்றொரு தேவை வரும்
பருவம் என்றொரு பொழுது வரும்
பாவை என்றொரு தேவை வரும்
உருவம் என்றொரு அழகு வரும்
ஒவ்வொரு நாளும் பழக வரும்
உருவம் என்றொரு அழகு வரும்
ஒவ்வொரு நாளும் பழக வரும்
பழகும் வரையில் தயக்கம் வரும்
பழகிய பின்னும் மயக்கம் வரும்
பழகும் வரையில் தயக்கம் வரும்
பழகிய பின்னும் மயக்கம் வரும்
காதல் காவலைக் கடந்து வரும்
காலங்கள் தோறும் தொடர்ந்து வரும்


யாருக்கு யார் என்று தெரியாதா
இந்த ஊருக்கு உண்மை புரியாதா
ஆஹா ஹா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people