Song lyrics

Vanathai Vittuvittu Lyrics

வானத்தை விட்டு பாடல் வரிகள்

Last updated Jul 13, 2026

Music
Vidyasagar
Year
2008
Singers
Tippu
Vanathai Vittuvittu

Lyrics

Vanathai Vittuvittu Lyrics

வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன
பாதத்தை விட்டு விட்டு பயணங்கள் நீள்வதென்ன
தாகத்தை விட்டு விட்டு தண்ணீரின் தேவையென்ன
என்னை மட்டும் விட்டு விட்டு பூமி இங்கு சுத்துதென்ன
கண்கள் இரண்டை கட்டி விட்டு காண சொல்லும் காட்சியென்ன
கடல் அலைமோத நிகழ்ந்தது கிடையாது
கனவு அலை போல ஓயாது ஹோ…
துணிவுகள் போல விரல் தொடும் நிலமாக
இனிமைகள் வந்து சேரும் நாள் ஏது ஏது
வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன

வானொலியில் பாட்டு வரும் எனது பாடல் எதுவோ
வீதியெல்லாம் பூக்கடைகள் எனது பூவும் எதுவோ
கோவிலிலே தீப விழா எனது தீபம் எதுவோ
பாதம் எல்லாம் கடற்கரையில் எனது தடமும் எதுவோ
தேடி தேடி தேய்ந்து போனேன் தேடல் என்று தீருமோ
காதல் நீரில் ஆசை நீரை தேடி என்ன லாபமோ
வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன

காகிதமாய் நானிருந்தேன் கவிதை எழுதி பழக
நான் எழுதும் வேளையிலே மொழிகள் யாவும் தயங்க
தூரிகையாய் நானிருந்தேன் அழகை நாளும் வரைய
நான் வரையும் வேளையிலே நிறங்கள் ஓடி ஒளிய
வேறு வேறு வேஷம் போட்டேன் காணவில்லை யாருமே
மேலும் மேலும் சோர்ந்து போனேன் மாறவில்லை கோணமே
வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன
பாதத்தை விட்டு விட்டு பயணங்கள் நீள்வதென்ன
தாகத்தை விட்டு விட்டு தண்ணீரின் தேவையென்ன
என்னை மட்டும் விட்டு விட்டு பூமி இங்கு சுத்துதென்ன
கண்கள் இரண்டை கட்டி விட்டு காண சொல்லும் காட்சியென்ன
கடல் அலைமோத நிகழ்ந்தது கிடையாது
கனவு அலை போல ஓயாது ஹோ…
துணிவுகள் போல விரல் தொடும் நிலமாக
இனிமைகள் வந்து சேரும் நாள் ஏது ஏது
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people