Song lyrics

Ah Engirundho Oru Kural Lyrics

எங்கிருந்தோ ஒரு குரல் பாடல் வரிகள்

Last updated Jul 14, 2026

Music
M. S. Viswanathan
Year
1975
Singers
P. Susheela, S. P. Balasubramaniam
Lyricist
Kannadasan
Ah Engirundho Oru Kural

Lyrics

Ah Engirundho Oru Kural Lyrics

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ 


தாழங் குடைகள் தழுவும் கொடிகள்
தாமரைப் பூக்களின் தோட்டம்
தாழங் குடைகள் தழுவும் கொடிகள்
தாமரைப் பூக்களின் தோட்டம்
மாலை மணிகள் மந்திரக் கனிகள்
மழலை என்றொரு தோட்டம்
மாளிகையில் ஒரு மதி வந்தது
அது எந்த வானத்து மதியோ
மாளிகையில் ஒரு மதி வந்தது
அது எந்த வானத்து மதியோ
மாயமாக ஒரு ஒலி வந்தது
அது எந்த ஆலயத்து மணியோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ

கதிரொளி தீபம் கலசம் ஏந்தி
கண்ணன் வருகின்ற கனவு
கதிரொளி தீபம் கலசம் ஏந்தி
கண்ணன் வருகின்ற கனவு
கண்டனள் ஒருத்தி வந்தனன் கண்ணன்
கண்கள்....
கங்கையிலே புது புனல் வந்தது
அது எந்த மேகம் தந்த புனலோ
கங்கையிலே புது புனல் வந்தது
அது எந்த மேகம் தந்த புனலோ
மங்கையிடம் ஒரு அனல் வந்தது
அது எந்த மன்னன் தந்த அனலோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது இந்த தேவதையின் குரலோ...
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people