Lyrics
Kalyaana Tirunaal Lyrics
கல்யாணத் திருநாள்
கன்னி வாழ்வில் ஒரு நாள்
காதலுக்கே வெற்றி தரும் பெருநாள்
கல்யாணத் திருநாள்...
காலமெல்லாம் தேடித் தேடி காதல் சந்தையில்
கண்டெடுத்த காளையில்லை எந்தன் காதலர் – பிள்ளைக்
கோலமுதல் கும்மாளமாய்க் கூடி விளையாடி
குங்குமத்தை இட்டவர்தான் எந்தன் காதலர் (கல்யாணத்)
காதலித்த அன்பர் கையால் தாலி கட்டினால்
கன்னி மனம் மகிழ்வதற்கும் எல்லையில்லையே –எந்த
பேதத்தையும் சுட்டிக் காட்டிப் பிரிக்க நினைத்தால்
பேதை மனம் துடுப்பதற்கும் எல்லையில்லையே (கல்யாணத்)
ஆடும் ஊஞ்சல் போல நெஞ்சம் ஆட்டம் ஆடுதே
அங்கும் இங்கும் அவர் முகமே தோற்றம் ஆகுதே-உயிர்
கூடு விட்டுக் கூடு பாய்ந்து கூட நினைக்குதே
கொண்ட ஆசை பலித்திடவே கனவு காணுதே (கல்யாணத்)
People
Related People
2 people