Song lyrics

Angiyodu Nijaar Aindhu Lyrics

அங்கியோடு நிஜாரணிந்தே பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
O. P. Nayyar
Year
1958
Singers
P. Susheela, T. V. Rathinam
Lyricist
Kannadasan
Angiyodu Nijaar Aindhu

Lyrics

Angiyodu Nijaar Aindhu Lyrics

அங்கியோடு நிஜாரணிந்தே வந்தாயே
உந்தன் இளமை காட்டி ஆசை தந்தாயே
எந்தன் பின்னே நீ தொடர்ந்து ஆடாதே
டாணாக்காரன் கையில் சிக்கி வாடாதே

கணம் கணம் உனை கண்டிடவும்
மனம் துடித்திடுதே மதன் கணையால்
வருவேன் நான் உன் பின்னே
கைவிலங்கு வந்தாலும் நிலை தளறேன்
யார்க்கும் நான் அஞ்சேனே
உந்தன் இளமை காட்டி ஆசை தந்தாயே.(எந்தன்)

மதிப்பும் கொண்டவள் நானே
பொது மகளென நீ எண்ணாதே
படே படே பயில்வானை
அஞ்சியே கெஞ்சச் செய்தேன்
கேலி செய்யக் கூடாதே
டாணாக்காரன் கையில் சிக்கி வாடாதே..(அங்கியோடு)

ரூபம் நோக்கினால் எந்தன்
மனதினிலோ காதல் சுடுதே...
செந்தாமரை கையாலே சற்று
நீக்கிடு பட்டு முகத்திரையே...
விழியாலெனைப் பாராயோ
உந்தன் இளமை காட்டி ஆசை தந்தாயே...(எந்தன்)

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people