Song lyrics

Kalaiyil Kettathu Lyrics

காலையில் கேட்டது பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1992
Singers
S. P. Balasubramaniam, Swarnalatha
Lyricist
Vaali
Kalaiyil Kettathu

Lyrics

Kalaiyil Kettathu Lyrics

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

***

ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ (இசை)

ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ

பெண் : தேவனின் கைவிரல் பாவை மேல் பட்டது

ஆண் : தேவியின் கண்விழி பானம் தான் விட்டது

பெண் : புதுவித அனுபவம்

ஆண் : ஆ..ஆஹ ஹா

பெண் : முதல் முதல் அறிமுகம்

ஆண் : ஓ..ஓஹொ ஹோ..

பெண் : புது வித அனுபவம் முதல் முதல் அறிமுகம்
தேனும் பாலும் தொட தொட ஊறுது

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பெண்குழு : ம்..ம்..ம்...ம்...ம்...ம்...
ம்..ம்..ம்...ம்...ம்...ம்...

***

பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி (இசை)

பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி

ஆண் : ஏக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி

பெண் : காதலா என் மனம் சேர்ந்ததே உன் வழி

ஆண் : ரகசியம் புரிந்தது

பெண் : ஆ..ஆஹ ஹா

ஆண் : அதிசயம் தெரிந்தது

பெண் : ஓ..ஓஹொ ஹோ..

ஆண் : ரகசியம் புரிந்தது அதிசயம் தெரிந்தது
காற்றும் பூவும் கலந்துறவாடுது
காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people