Song lyrics

Kinnaththil Then Lyrics

கிண்ணத்தில் தேன் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1978
Singers
K. J. Yesudas, S. Janaki
Lyricist
Vaali
Kinnaththil Then

Lyrics

Kinnaththil Then Lyrics

கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர
எங்கெங்கோ நீந்துகிறேன்
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்


ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
நானும் ஓர் திராட்சை ரசம்
நாயகன் உந்தன் வசம்
நானும் ஓர் திராட்சை ரசம்
நாயகன் உந்தன் வசம்
தென்றல் போல் மன்றம் வரும்
தேவி நான் பூவின் இனம்
கொஞ்சமோ கொஞ்சும் சுகம்
கொண்டு போ அந்தப்புரம்
கன்னத்தில் தேன் குடித்தால்
கற்பனை கோடி வரும்
உள்ளத்தில் பூங்கவிதை
வெள்ளம் போல் ஓடி வரும்
கன்னத்தில் தேன் குடித்தால்
கற்பனை கோடி வரும்


ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆனிப்பொன் கட்டில் உண்டு
கட்டில் மேல் மெத்தை உண்டு
ஆனிப்பொன் கட்டில் உண்டு
கட்டில் மேல் மெத்தை உண்டு
மெத்தை மேல் வித்தை உண்டு
வித்தைக்கோர் தத்தை உண்டு
தத்தைக்கோர் முத்தம் உண்டு
முத்தங்கள் நித்தம் உண்டு
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்


ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

யாழிசை தன்னில் வரும்
ஏழிசை எந்தன் மொழி
யாழிசை தன்னில் வரும்
ஏழிசை எந்தன் மொழி

விண்ணிலே வட்டமிடும்
வெண்ணிலா உந்தன் விழி

பள்ளியில் காலை வரை
பேசிடும் காதல் கதை

கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்

கன்னத்தில் தேன் குடித்தால்
கற்பனை கோடி வரும்

கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்

ஆ ஆ

கைகளில் ஏந்துகிறேன்

ஆ ஆ

கைகளில் ஏந்துகிறேன்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people