Lyrics
Kanavithuthan Lyrics
கனவிதுதான் நிஜமிதுதான்
உலகினிலே என யார் சொல்லுவார்
விதி யார் வெல்லுவார்..ஓ....ஓஒ...ஓ.
கனவிதுதான் நிஜமிதுதான்.....(கனவிதுதான்)
இள வயதின் நினைவினிலே
ஏக்கமெனும் இருள் சூழ்ந்திடலாம்
ஒளி மாய்ந்திடலாம்....ஓ...ஓ......ஓ...
கனவிதுதான் நிஜமிதுதான்....
மனம் ஓரிடமும் உடல் வேறிடமும்
இரு கூறானதும் விதி வசமே
சிறு போதுடனே வாழும் நறுமணம்
மலரானதும் வெகுதூரம் செல்வதுபோல்
காதலின் தன்மை விலகி போவதும் உண்மை (கனவிது)
நிறைவேறாத ஆசை வளர்வதும் ஏனோ
நிலை பெறாததும் ஏனோ வினை தானோ
எது நேரினும் அழியாதே
இரு மனம் ஒன்றாகிய மெய்க்காதல்
எந்நாளும் காணுமே இன்பம்....
பிரிந்தால் காதலே துன்பம்......(கனவிதுதான்)
People
Related People
4 people