Lyrics
Iravingu Theevai Lyrics
இரவிங்கு தீவாய் நமை சூழுதே
விடியலும் இருளாய் வருதே
நினைவுகள் தீயாய் அலை மோதுதே
உடலிங்கு சாவாய் அழுதே
பிரிவே உருவாய் கரைந்து போகிறேன்
உயிரின் உயிராய் பிரிந்து போகிறேன்
மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய்
வறண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்
கனவே துணையாய் ஒழிந்து போகட்டும்
இரவிங்கு தீவாய் நமை சூழுதே
விடியலும் இருளாய் வருதே
நினைவுகள் தீயாய் அலை மோதுதே
உடலிங்கு சாவை அழுதே
இந்த தாமரை குளம் மீறி தனி ஆகுதே
அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயிதே
ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே
அட காலங்கள் தடை மீறி தடை போடுதே
நீ இன்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வை
வாழ்வே வா நீ தான் உயிரின் உயிரே
வரவா… வரவா…
தினம் தினம் உயிர் தெழும்
மனம் அன்றாடம் மாயுமே
உயிர் வரை நிறைந்துனை
மனம் கொண்டாடி வாழுமே
மரங்கள் சாய்ந்து கூடு
வீழ்ந்து குயில்கள் ராகம் பாடுமே
இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்
நிலவு பொறுமை காக்குமே
மழை வழி கடல் விடும்
வின்காதல் மண்ணை சேருமே
உனை உடல் பிரிந்தினும்
என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே
நீ போய் வா வா வா
விடியலும் இருளாய் வருதே
நினைவுகள் தீயாய் அலை மோதுதே
உடலிங்கு சாவாய் அழுதே
பிரிவே உருவாய் கரைந்து போகிறேன்
உயிரின் உயிராய் பிரிந்து போகிறேன்
மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய்
வறண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்
கனவே துணையாய் ஒழிந்து போகட்டும்
இரவிங்கு தீவாய் நமை சூழுதே
விடியலும் இருளாய் வருதே
நினைவுகள் தீயாய் அலை மோதுதே
உடலிங்கு சாவை அழுதே
இந்த தாமரை குளம் மீறி தனி ஆகுதே
அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயிதே
ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே
அட காலங்கள் தடை மீறி தடை போடுதே
நீ இன்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வை
வாழ்வே வா நீ தான் உயிரின் உயிரே
வரவா… வரவா…
தினம் தினம் உயிர் தெழும்
மனம் அன்றாடம் மாயுமே
உயிர் வரை நிறைந்துனை
மனம் கொண்டாடி வாழுமே
மரங்கள் சாய்ந்து கூடு
வீழ்ந்து குயில்கள் ராகம் பாடுமே
இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்
நிலவு பொறுமை காக்குமே
மழை வழி கடல் விடும்
வின்காதல் மண்ணை சேருமே
உனை உடல் பிரிந்தினும்
என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே
நீ போய் வா வா வா
People
Related People
6 people