Lyrics
Sonnaal Thaan Theriyumaa Lyrics
சொன்னால்தான் தெரியுமோ அன்னமே
இதை சொன்னால்தான் தெரியுமோ அன்னமே
இதை தன்னால் அறியாதவர்
என்னே ஆண் பிள்ளை இவர்.....(சொன்னால்)
பொன்னம்பல நடன மன்னன் திருக்குமரன்
புள்ளி மயிலோனுக்கு உள்ளமெல்லாம் திறந்து
சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை
சொன்னால்தான் தெரியுமோ
ஓடையிலே நீரோடையிலே – மலர்
சூடையிலே விளையாடையிலே
வாசமலர் கதம்பினோடு ஜவ்வாதணிந்து
வந்தான் முருகன் அந்த வழிதனிலே
ஜாடை பல காட்டினேன் மையல் மிகுந்து
சந்தமிகும் பதங்களும் பாடினேன்....போடி..
கொஞ்சமும் அவன் புரிந்து கொள்ளவே இல்லை
ஓடி அழைத்துக்கொண்டு வாடி மனம் திறந்து (சொன்னால்)
People
Related People
3 people