Song lyrics

Tharaiyil Natakkuthu Lyrics

தரையில் நடக்குது பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Sirpi
Year
1996
Singers
S. P. Balasubramaniam, Swarnalatha
Lyricist
Vaali
Tharaiyil Natakkuthu

Lyrics

Tharaiyil Natakkuthu Lyrics

தரையில் நடக்குது தாமிரபரணி

தழுவ துடிக்குது திருநெல்வேலி

எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்

உனக்கு பிடித்தது நான் தரும் போது எனக்கும் பசி அடங்கும்

கொஞ்சம் நெறைய கொஞ்சம் படிச்சவ கொஞ்சம் லவ்வா

ஹேய் தரையில் நடக்குது தாமிரபரணி

தழுவ துடிக்குது திருநெல்வேலி

எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்

உனையே நான் எடுத்து தினம் உடையாய் உடுத்துகிறேன்

ஏய் எனை நீ அணைப்பது போல் எண்ணி இரவை கடத்துகிறேன்

இங்கு தனியே நான் நடந்தாலே நிழல் தரையில் விழுவதில்லை

எந்தன் நிழலே நீ எனும் செய்தி எந்த நிலமும் அறிந்ததில்லை

எந்தன் உயிர்மூச்சே உன்னை அகன்றாலே நுரையீரல்கள் இறந்துவிடும்

கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டால் தூங்கக்கூடும்

ஹேய் தரையில் நடக்குது தாமிரபரணி

தழுவ துடிக்குது திருநெல்வேலி

எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்

ஹோ உனக்குன் சேர்த்தல்லவா தினம் உணவை உண்ணுகிறேன்

எனக்கோர் முகவரியாய் இங்கு உன்னையே எண்ணுகிறேன்

கொட்டும் மழையில் நீ நனைந்தாலே ஜலதோஷம் எனக்கு வரும்

வெட்டவெளியில் நீ திறிந்தாலே இங்கு எனக்கு வேர்த்துவிடும்

உந்தன் விழியோரம் துளி நீர் வந்தாலும் இங்கு கண்ணுக்குள் தீ பிடிக்கும்

காதல் தீதான் பற்றிக்கொள்ளும் அம்மம்மா ஹோ

தரையில் நடக்குது தாமிரபரணி

தழுவ துடிக்குது திருநெல்வேலி

எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்

உனக்கு பிடித்தது நான் தரும் போது எனக்கும் பசி அடங்கும்

கொஞ்சம் நெறைய கொஞ்சம் படிச்சவ கொஞ்சம் லவ்வா

தரையில் நடக்குது தாமிரபரணி

தழுவ துடிக்குது திருநெல்வேலி

எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people