Song lyrics

Iru Vizhiyin Lyrics

இரு விழியின் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Ilaiyaraaja
Year
1989
Singers
S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Lyricist
Pulamaipithan
Iru Vizhiyin

Video

Iru Vizhiyin

Lyrics

Iru Vizhiyin Lyrics

இரு விழியின் வழியே நீயா வந்து போனது?
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது?
இரு பார்வைகள் பரிமாறிடும்
மன ஆசைகள் அணை மீறிடும்
அணை மீறும் போது காவல் ஏது?

இரு விழியின் வழியே நீயா வந்து போனது?
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது?

தொட்டில் இடும் இரு தேமாங்கனி
என் தோளில் ஆட வேண்டுமே
கட்டில் இடும் உன் காமன் கனி
மலர் மாலை சூட வேண்டுமே

கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு
தேதி ஒன்று பார்க்கிறேன்
கொஞ்சும் கிளி மஞ்சம் இடும்
செய்தி சொல்லப் போகிறேன்

கார்கால மேகம் வரும்
கல்யாண ராகம் தரும்
பாடட்டும் நாதஸ்வரம்
பார்க்கட்டும் நாளும் சுகம்

விடி காலையும் இள மாலையும்
இடை வேலையின்றி இன்ப தரிசனம்

இரு விழியின் வழியே நீயா வந்து போனது?
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது?
இரு பார்வைகள் பரிமாறிடும்
மன ஆசைகள் அணை மீறிடும்
அணை மீறும் போது காவல் ஏது?

உன் மேனியும் நிலை கண்ணாடியும்
ரசம் பூச என்ன காரணம்?
ஒவ்வொன்றிலும் உன்னை நீ காணலாம்
இதை கேட்பதென்ன நாடகம்?

எங்கே எங்கே ஒரே தரம்
என்னை உன்னில் பார்க்கிறேன்
இதோ இதோ ஒரே சுகம்
நானும் இன்று பார்க்கிறேன்

தென்பாண்டி முத்துக்களா?
நீ சிந்தும் முத்தங்களா?
நோகாமல் கொஞ்சம் கொடு
உன் மார்பில் மஞ்சம் இடு

இரு தோள்களில் ஒரு வானவில்
அது பூமி தேடி வந்த அதிசயம்

இரு விழியின் வழியே நீயா வந்து போனது?
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது?
இரு பார்வைகள் பரிமாறிடும்
மன ஆசைகள் அணை மீறிடும்
அணை மீறும் போது காவல் ஏது?
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people