Lyrics
Kathayai Kelada Lyrics
கதையைக் கேளடா – கண்ணே
கதையைக் கேளடா....
வெள்ளை நிறப் பசு ஒன்று – கண்ணே
துள்ளுங் கன்றோடொரு வீட்டில்
அன்பில் தோய்ந்து கிடக்கையிலே
குள்ள நரி வந்து கலைத்ததடா
வெள்ளை மனமுங் கறுத்ததடா
பாசமெல்லாம் பறந்ததடா
பள்ளத்தில் பசுவும் பாய்ந்ததடா.....(கதையை)
கண்கள் திறந்து எழுந்ததடா
கன்றை நினைத்து அலைந்ததடா
மனது ஓடியும் வேளையிலே
அம்மா எனுங் குரல் கேட்டதடா
தாவி ஓடி அணைத்ததடா......(கதையை)
கண்ணே கேளடா....மணியே கேளடா....
கண்மணியே கேளடா........
People
Related People
5 people